பருவம்

சிறு வயதில் பெற்றொர்க்ள், உறவினர்க்ள், ஆசிரிய்ர்கள் கட்டுபாட்டில் உபதேசத்தில் தான் வளர்கிறோம். ஆனால் பருவம் வந்த வயதில் இந்த உலகம் மீது நமக்குள்ள பார்வை வேறுபடுகிறது. எப்போது இவர்களின் கட்டுபாட்டிலிருந்து வெளிவருகிறோமோ அப்போது நம்முடைய பொறுப்புகள் கூடுகிறது. சமூக பார்வை, முடிவு எடுக்கும் திறன், செயல்பாடு, யோசனை இவையெல்லாம் நம்முடைய சொந்த வேலையாக மாறுகிறது. இந்த காலத்தில் ( பருவத்தில் ) தேவையானவை தானாகவே நடக்கும் என்பதால் தேவையில்லாத விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நல்ல அனுபவம் வருங்காலத்திற்கு வழிகொடுக்கும்.
வாழ்க்கையின் மூன்றாம் எட்டும், நான்காம் எட்டும் நம்மை யார் என்று இந்த சமூகத்திற்கு காட்டும். இந்த கால கட்டத்தில் பல சுவாரஸ்ய நிகழ்வுகளின் பிண்ணணியில் நாம் வலம் வருகிறோம். தனி மனித பார்வை சமூக பார்வையாக மாறுகிறது. சிறு வயதில் குழப்பம் இல்லாமல், கேள்விகளுக்கு இடம் இல்லாமல் இருந்து திடீரென பல விடைகளை தேடி அலைகின்றோம். ஆதலால், இந்த பருவம் ஆபத்தானதும் பல அபத்தங்களுக்கும் உரியது.
நன்றி.

Comments

Popular posts from this blog

அவரது படத்தை திறப்பார்களா?

நண்பர் கார்த்திகின் கடவுள் பற்றிய மிக தெளிவான பதில்,